search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    2 இருசக்கர வாகனம் திருட்டு
    X

    2 இருசக்கர வாகனம் திருட்டு

    மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடி கிராமம் ஜே.ஜே நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது42). கூலி தொழிலாளியான இவர் தனது பைக்கை ஜெயங்கொண்டம் வாரச்சந்தை முன்பு நிறுத்திவிட்டு சந்தையில் காய்கறி வாங்கி வந்து மீண்டும் பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் அக்கம் பக்கத்தில் தேடியும் எங்கும் கிடைக்காததால் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் காணாமல் போன வாகனத்தையும், திருடிச் சென்ற மர்ம நபர்களையும் தேடி விசாரித்து வருகின்றனர்.இதேபோல் செங்குந்தபுரம் ஏழாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (62). இவர் தனது மோட்டார் சைக்கிளை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை முன்பு கேட்டின் வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்று சிகிச்சை பெற்று மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தில் எங்கு தேடியும் கிடைக்காதால் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிந்து காணாமல் போன மோட்டார் சைக்கிளையும், திருடிச் சென்ற மர்ம நபரையும் தேடி விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×