search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
    X

    பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

    • பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பருக்கல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் எழிலரசன் (வயது 43), தர்மராசு (33), சந்திரகாசன் (61), குமார் (45) ஆகிய 4 பேரும் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.




    Next Story
    ×