search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு 50 ஆயிரம் பரிசு
    X

    கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு 50 ஆயிரம் பரிசு

    • ஒரு வருடமாக நடைபெற்ற போட்டி நிறைவடைந்தது
    • பத்துக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மாடர்ன் கல்வி மைதானத்தில்கீழக்குடியிருப்பு KKP-வாரியர்ஸ் அணியினர் நடத்திய தொடர் கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு வருடமாக நடைபெற்று நேற்று நிறைவு பெற்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டத்திலிருந்து கிரிக்கெட் அணியினர் போட்டியில் கலந்து கொண்டனர். இத்தொடருக்கான முதல் பரிசு வென்ற திருமானூர்-FRESHஅணிக்கு, ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-ம் பரிசினை பொன்பரப்பி-சத்ரியன்பிரதர்ஸ் அணி, 3-ம் பரிசினை சிலால்-DXஅணி, 4-ம் பரிசினை உடையார்பாளையம்-தமிழன்CC அணி பெற்றனர்.இவர்களுக்கு அமெச்சூர் கபடி கழக மாவட்ட செயலாளர் வைத்தி பரிசுகளை வழங்கினார். இத்தொடரானது கடந்த 2022- பொங்கல் அன்று துவங்கப்பட்டது.இந்தப் போட்டிக்கு பரிசுகள் வழங்கிய மாடர்ன் கல்வி குழுமம் எம் ஆர் சுரேஷ், கவுன்சிலர் ரங்கநாதன். எஸ் டி துரை மாதவன் தேவா பரப்பிரம்மம் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமார் உள்ளிட்ட அனைவருக்கும்கபடி குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.

    Next Story
    ×