search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய 200 பேர் மீது வழக்கு
    X

    ஜெயங்கொண்டத்தில் ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய 200 பேர் மீது வழக்கு

    • ஜெயங்கொண்டத்தில் ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய 200 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது
    • போக்குவரத்து காவல்துறை போலீசார் இருசக்கர வாகனம் திருட்டுப் போவதை தடுக்கும் விதமாக ஆய்வு மேற்கொண்டனர்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்ஸ்பெக்டர் ஷகீரா பானு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் ஜெயங்கொண்டம் பகுதிகளில் போக்குவரத்து காவல்துறை போலீசார் இருசக்கர வாகனம் திருட்டுப் போவதை தடுக்கும் விதமாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் அமர்ந்து சென்ற 25 பேர் மீதும், ஹெல்மெட் அணியாமல் சென்ற 120 பேர் மீதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்ற வாகனங்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    நேற்று ஒரே நாளில் மட்டும் ஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து விதி மீறிய 200 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் மீண்டும் ெஹல்மெட் அணியாமலோ, உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்டினாலோ அல்லது அனுமதிக்கு புறம்பாக 2 பேருக்கு மேல் வாகனங்களில் அமர்ந்து சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தும் அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×