என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழப்பு
- அரசு பேருந்து ஓட்டுனர் உயிரிழந்தார்.
- பணியில் இருந்த போது ஏற்பட்ட சோகம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் வழியாக குணமங்கலம் வரை செல்லக்கூடிய அரசு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை அரியலூர் மாவட்டம் பெரிய தத்தூர் கிராமத்தைச் சார்ந்த கனகசபை மகன் புருஷோத்தமன் (வயது 58) என்பவர் இயக்கியுள்ளார்.
பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். அப்பொழுது ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர் நகர் பேருந்தும் நிறுத்தம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை இயக்க முற்பட்ட பொழுது திடீரென்று ஓட்டுநர் புருஷோத்தமனுக்கு நெஞ்சு வலி ஏற்படவே அதே இடத்தில் துடி துடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இதனை பார்த்த நடத்துனர் மற்றும் பேருந்து பயணிகள் அவரை மீட்டு அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
உடனடியாக இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பேருந்து ஓட்டுனர் பணியில் இருக்கும் போது மாரடைப்பு வந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்