search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி
    X

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி

    • அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலியானார்
    • இது குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர் (35).இளநீர் வியாபாரியான இவர் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகளிடம் இளநீர் வாங்கி விற்பனை செய்து வந்தார். இன்று ஆண்டிமடம் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள மரங்களில் இளநீர் பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார்.

    எதிர்பாராத விதமாக தவறி விழுந்த இளநீர் வியாபாரி தனசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.உடனடியாக இது குறித்து ஆண்டிமடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தனசேகரன் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    Next Story
    ×