என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் லாரி மீது மோதியதில் பலி
- ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றவர் லாரி மீது மோதியதில் பலியானார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்,
கடலூர் மாவட்டம் கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவரது மகன் பாஸ்கர் (வயது 57). இவர் குழுமூர் கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வ கோவிலுக்கு காது குத்து நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கோரியம்பட்டி பஸ்பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த பாஸ்கர் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்ட பாஸ்கர் ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்துள்ளார்.
அருகில் உள்ளவர்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கே இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பாஸ்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் போலீசார் பாஸ்கரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்