என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வாகன விபத்தில் வாலிபர் பலி
- மீன்சுருட்டி அருகே வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
- உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சிதம்பரம் நேரு நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் வினோத்குமார் (வயது24). இவர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சோழதரம் கோவிந்தநல்லூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் அவருடன் சேர்ந்த இருவர் பாப்பாக்குடி வருவதற்காக சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சர்வீஸ் சாலையில் இருந்து திடீரென தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வினோத் குமார் என்பவர் வந்ததால் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சுரேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் வந்த இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து சுரேஷ்குமார் உடலை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்