search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. சார்பாக தண்ணீர் பந்தல்
    X

    அ.தி.மு.க. சார்பாக தண்ணீர் பந்தல்

    • திருமானூர் பேருந்து நிலையம் அருகே திறக்கப்பட்டது
    • மாவட்ட செயலாளர் திறந்து வைத்தார்

    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க. சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவழகன் தண்ணீர் பந்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமிநாதன், ஒன்றிய குழு துணை உறுப்பினர் அம்பிகா ராஜேந்திரன், அவைத்தலைவர் அன்பழகன், மகாலட்சுமி கருணாநிதி, கோவிலூர் சரவணன், ராஜேஸ்வரி ஜம்புலிங்கம், ரவி, சதாசிவம், டி.வி.கார்த்திக், ஜே கே கார்த்திக், குருவாடி முருகேசன், அரசு ராஜேந்திரன், சபரிநாதன், சௌந்தர், முரளிதரன், டி.எம்.ராஜா, அயோத்தி, அன்பு, கிருஷ்ணமூர்த்தி, மாரியப்பன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×