search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா
    X

    அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா

    • மாநில அளவிலான அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்
    • வெளிநாடு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்

    ஜெயங்கொண்டம்,

    மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளி கொணரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டியில் மாவட்ட அளவில் மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான மாநில அளவிலான போட்டி நடைபெற்றது. இதில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநில அளவில் வெற்றி பெறும் 25 மாணவர்கள் வெளிநாடு கல்வி பயணம் அழைத்து செல்லப்படுவர். மாநில அளவிலான வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டியில் அரியலூர் மாவட்டம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் வெ.நிதிஷ்குமார் வெற்றி பெற்று உள்ளார். அரியலூர் மாவட்டத்தில் இவர் ஒருவர் மட்டுமே தேர்தேடுக்கப்பட்டு உள்ளார். மாநில அளவில் வெற்றி பெற்று வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் மாணவர் வெ.நித்திஷ் குமார் மற்றும் வழிகாட்டியான அறிவியல் பட்டதாரி ஆசிரியர் இலா.செங்குட்டுவன் ஆகியோருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இப்பாராட்டு விழாவிற்கு ஆமணக்கந்தோண்டி ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்ச்செல்வி நடராஜன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் க.இராசாத்தி , ஆசிரியர் பயிற்றுநர் சு.ஐயப்பன், ஊராட்சி மன்ற செயலாளர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ச.சாந்தி வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் அ.மதலைராஜ் வெற்றி பெற்ற மாணவருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளி ஆசிரியர்கள் ஹேமலதா, ஜெயப்பிரியா, பவானி, கவிதா, ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். கணித பட்டதாரி ஆசிரியர் கு.செல்லதுரை நன்றி கூறினார். விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவி மின்னல்கொடி வெங்கடேசன் மற்றும் உறுப்பினர்கள் , பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×