search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரியலூர் பெண் குண்டர் சட்டத்தில் கைது
    X

    அரியலூர் பெண் குண்டர் சட்டத்தில் கைது

    • அரியலூர் பெண் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டார்
    • மாவட்ட போலீஸ் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையை ஏற்று கோமதியை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர்ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள சிலம்பூர், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோமதி (வயது 41). இவர் மதுபானங்களை பதுக்கி கள்ள சந்தையில் விற்று வந்தாக கைது செய்யப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கோமதி தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டு வருவதாலும், இவர் மீது ஏற்கனவே 70-க்கும் மேற்பட்ட மது குற்ற வழக்குகள் உள்ளது. இதன் காரணமாக மாவட்ட போலீஸ் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையை ஏற்று கோமதியை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர்ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    Next Story
    ×