search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர் இளம்பெண்கள், மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    வளர் இளம்பெண்கள், மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் பயிலும் வளர்இளம்பெண்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • 13 வயது கடந்த மாணவிகள் பருவ மாற்றம் ஏற்படும் இந்த வயதில் மாணவர்கள் தாங்கள் எவ்வாறு உடலை பார்த்து கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வு வகுப்பு நடத்தினர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூரில் அரசு முதன்மை சுகாதார நிலையத்தில் திருமானூர் ஒன்றிய பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வளர்இளம் பருவத்தினர் நலவாழ்வு மையம் சார்பாக விழிப்புணர்வு நகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் செல்வமணி தலைமை தாங்கினார். சமூக சுகாதார அலுவலர்கள் ஜோதி மற்றும் உஷா ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    குறிப்பாக 13 வயது கடந்த மாணவிகள் பருவ மாற்றம் ஏற்படும் இந்த வயதில் மாணவர்கள் தாங்கள் எவ்வாறு உடலை பார்த்து கொள்ள வேண்டும், பாலியல் தொந்தரவில் இருந்து தாங்களை காத்துகொள்ளவேண்டும் போன்ற விழிப்புணர்வு வகுப்பு நடத்தினர்.

    செவிலியர்கள் ஜெயந்தி, தமயந்தி ஆகியோர் நிகழ்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மருந்தாளுனர் வசந்தகுமார் நன்றி கூறினார். இதில் கீளக்கொளத்தூர், கள்ளூர், திருப்பெயர், கண்டிராதித்தம், திருமழபாடி, கீழகாவட்டாண்குறிச்சி பள்ளி மாணவர்கள் கலந்து கொன்டனர்.

    மாணவர்களுக்கு தேனீர், பிஸ்கட், பேக், தொப்பி, சீருடை மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.அனைத்து பள்ளி மாணவர்களையும் கீழகொளத்தூர் அரசுமேல்நிலைப்பள்ளி ஆசிரியை தஞ்சைஅரசி வழிநடத்தினார்.

    Next Story
    ×