என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அய்யனார் கோவில் தேர் திருவிழா
- பெரிய நாகலூர் கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்றது
- ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே பெரியநாகலூர் கிராமத்தில் அய்யனார் கோயில் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. தேர்திருவிழாவை முன்னிட்டு கடந்த 17ம் தேதி பூ போடுதல் விழாவும், 24ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்று முதல் தினந்தோறும் வகையறாக்கள் மண்டகப்படி வாரியாக சாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்வான தேர்திருவிழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அய்யனார் கோயிலில் உள்ள விநாயகர், பூர்ண புஷ்கலாம்பிகா, அய்யனார், கருப்புசாமி, அரியமுத்து ஆண்டவர், செங்கமல ஆண்டவர் ஆகிய சுவாமிகளுக்கு பன்னீர், சந்தனம், பால், தயிர், இளநீர், திரவிய பொடி, விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான மங்கள பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 10 மணிக்கு மேல் மேளதாளங்கள் முழங்க தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியின் போது மழை பெய்தது. இருப்பினும் கொட்டும் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து சுவாமிகள் தேரில் இருந்து தங்கு படையலும், 4ம் தேதி நாளை மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்