search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கம்பி வேலியை சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்கு
    X

    கம்பி வேலியை சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்கு

    • விவசாய நிலம் சுற்றி உள்ள கம்பி வேலி சேதம்
    • 3 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் நடவடிக்கை

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே பொட்டக்கொல்லை மேல தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் கலைமணி (வயது62). இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் விவசாய நிலத்தை சுற்றி கம்பி வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த கண்ணையன், நீலமேகம், பொன்னுசாமி ஆகியோர் கலைமணியை தகாத வார்த்தையால் திட்டி அவரது நிலத்தில் உள்ள கம்பி வேலியை சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் கலைமணி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×