search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செந்துறை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்
    X

    செந்துறை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

    • செந்துறை அருகே மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது
    • பல்வேறு அலங்காரங்களில் மாரியம்மன் நாள் தோறும் பக்தர்களுக்கு அருள் பாளித்து வந்தார்.

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் ஒரு ஆண்டு தேர் திருவிழாவும் மற்றொரு ஆண்டு தீமிதி திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து நாள்தோறும் மாரியம்மன் வீதி உலாவும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. பல்வேறு அலங்காரங்களில் மாரியம்மன் நாள் தோறும் பக்தர்களுக்கு அருள் பாளித்து வந்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9 ஆம் நாள் தேர்த்திருவிழா நேற்று காலை தொடங்கியது. முன்னதாக தேர் கட்டும் பணிகள் நிறைவு பெற்றதும் விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் விளைந்த மா, பலா, முந்திரி ஆகியவற்றை தேரில் கட்டி அலங்கரித்தனர்.அதனைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தேரை இழுத்து சென்றனர். தேரோடும் 4 வீதிகளில் தேர் வலம் வந்தது. கடும் வெயில் காரணமாக மதியம் தேர் பாதி வழியில் திருத்தப்பட்டது. பின்னர் மாலை தேர் வடம் பிடிக்கப்பட்டு மீண்டும் கோவில் சன்னதியை வந்தடைந்தது. இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் திருவிழாவை கண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

    Next Story
    ×