search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
    X

    பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

    • ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து தா.பழூர் அருகே மறியல்
    • போக்குவரத்து பாதிப்பு

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் ஊராட்சியை சேர்ந்த கோட்டியால் மேலத்தெரு பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. அப்பகுதியில் இருந்த குளமும் தூர் வருவதற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் குடிநீர் பிரச்சினை குறித்து முறையிட்டு வந்துள்ளனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் தா.பழூர், விளாங்குடி சாலையில், கோட்டையால் பாண்டிபஜார் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்த தா.பழூர் போலீசார் பொதுமக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதே போல ஊராட்சி நிர்வாக அலுவலர்களும் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் தேவை உடனடியாக தீர்த்து வைக்கப்படும் என்று அப்போது உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டமானது கைவிடப்பட்டது. பொதுமக்களின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டது.

    Next Story
    ×