search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.ஐ.டி.யு. நடைப்பயணக் குழுவிற்கு அரியலூரில் வரவேற்பு
    X

    சி.ஐ.டி.யு. நடைப்பயணக் குழுவிற்கு அரியலூரில் வரவேற்பு

    • சி.ஐ.டி.யு. நடைப்பயணக் குழுவிற்கு அரியலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியுவினர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

    அரியலூர்:

    கடலூரிலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சி.ஐ.டி.யு. குழுவினருக்கு அரியலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.26,000 வழங்க வேண்டும். நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை செயல்படுத்துதலை கைவிட வேண்டும். தொழிலாளர் நலன் பாதுகாக்கும் வகையில் முத்தரப்பு குழுக்களை செயல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

    பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிஐடியுவினர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.இந்தக்குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் அரியலூர் மாவட்டம் வந்தடைந்த நிலையில், அரியலூர் அண்ணா சிலை அருகே அவர்களுக்கு அரியலூர் மாவட்ட சிஐடியு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கோரிக்கைகள் வலியுறுத்தி பேசப்பட்டது. பின்னர், திருமானூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு திருமானூர் கிளைச் செயலாளர் புனிதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினர்.

    Next Story
    ×