search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் அருகே கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
    X

    ஜெயங்கொண்டம் அருகே கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

    • ஜெயங்கொண்டம் அருகே கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
    • போலீசார் வழக்கு பதிந்து செல்போன் டவர் சிக்னலை வைத்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

    ஜெயங்கொண்டம்,

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் வினோத் (வயது 23). கட்டிட தொழிலாளியான இவர் பெங்களூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அரியலூர் மாவட்டம் கரடி குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு 15 வயது சிறுமியை பேஸ்புக் மூலம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி வினோத் பெங்களூருக்கு வருமாறு அழைத்துள்ளார்.

    இதனையடுத்து சிறுமி புறப்பட்டு பெங்களூருக்கு சென்று விட்டார். பின்னர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தன ச்செல்வன் தலைமை யிலான போலீசார் வழக்கு பதிந்து செல்போன் டவர் சிக்னலை வைத்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வினோத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×