என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாவட்ட அளவிலான கராத்தே போட்டி
- 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
- கோப்பைகள் வழங்கி பாராட்டு
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உடையாம்பாளையம் என்.ஆர். பப்ளிக் பள்ளியில் தண்டர் விளையாட்டு கழகம் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் நிர்வாக இயக்குனர் ராமமூர்த்தி தலைமையேற்று நடத்தி வைத்தார். தண்டர் விளையாட்டு கழகம் நிறுவனர் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராவணன் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகள் வழங்கி மாணவர்களை வாழ்த்தினார். போட்டியில் உடையார்பாளையம் என்.ஆர். பப்ளிக் ஸ்கூல் ஜெயங்கொண்டம் மாடர்ன் பி .எம். பப்ளிக் ஸ்கூல் அன்னை தெரசா பள்ளி ஜெயங்கொண்டம் உட்கோட்டை குறுக்கு ரோடு தா பலூர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிறுவனர் பொய்யாமொழி கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும் மாணவ மாணவிகளுக்கு கராத்தே மாஸ்டர் வினோத் பயிற்சி அளித்து போட்டி நடத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்