என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் பலி
- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் என்ஜினீயர் உயிரிழந்தார்.
- மோட்டார் சைக்கிளில் சென்றார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி காலனி தெருவை சேர்ந்த செல்வராசுவின் மகன் புஷ்பராஜ் (வயது 32). மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு விவசாய வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று புஷ்பராஜ் நடுவலூர் நால்ரோடு பகுதியில் இருந்து கார்குடி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். எதிரே கார்குடி காலனி தெருவை சேர்ந்த கண்ணன்(45) என்பவர் சாலையோரத்தில் நடந்து வந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக புஷ்பராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கண்ணன் மீது மோதியது. இதில் இருவரும் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதில் புஷ்பராஜ் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்