search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரியலூரில் செயல்முறை கிடங்கு கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
    X

    அரியலூரில் செயல்முறை கிடங்கு கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

    • அரியலூரில் செயல்முறை கிடங்கு கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
    • மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த கயர்லாபாத் கிராமத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் புதிய வட்ட செயல்முறை கிடங்கு அமைப்பதற்கான பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி கலந்து கொண்டு கட்டுமானப் பணியை தொடக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்: கயர்லாபாத் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 3ஆயிரம் மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு ரூ.496.84 லட்சம் மதிப்பீட்டிலும், ஆண்டிமடம் வட்டம் விளந்தை கிராமத்தில் 2ஆயிரம் மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு ரூ.402.52 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் 2 கிடங்குகள் ரூ.899.36 லட்சம் மதிப்பீட்டில் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். தற்போதைய கிடங்குகளின் உணவுப் பொருள் சேமிப்பின் கொள்ளளவு 5,500 மெ.டன் உள்ள நிலையில், கூடுதல் புதிய கிடங்குகளின் கொள்ளளவு திறனுடன் 10,500 மெ.டன் சேமிப்பு கிடங்குகளின் கொள்ளளவாக உயர்த்தப்படவுள்ளது. இதன் மூலமாக அரியலூர் மாவட்டத்திற்கு தேவையான உணவுப் பொருள்களை சேமித்து வைத்து பொதுவிநியோகத் திட்டத்திற்கு வழங்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். இந்நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ. சின்னப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சிற்றரசு, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன், ஊராட்சித் தலைவர் செளந்தர்ராஜன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


    Next Story
    ×