search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் சிலையை தமிழகத்தில் நிறுவி அரசு விழாவாக கொண்டாட வேண்டும்-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
    X

    பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் சிலையை தமிழகத்தில் நிறுவி அரசு விழாவாக கொண்டாட வேண்டும்-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு

    • பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் சிலையை தமிழகத்தில் நிறுவி அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என சீமான் பேசினார்
    • தென்னிந்திய மொழிகளுக்குத் தாய் மொழியாகத் தமிழே விளங்குகிறது என்ற உண்மையை உல குக்கு முதன்முதலாக அறி–வித்தவர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் ஆவார்

    அரியலூர்:

    அரியலூரில் தமிழ்த் தேசியக் கிறிஸ்தவ இயக்கம் சார்பில் ம.சோ.விக்டர் தொகுத்து வழங்கிய பிரான்சிசு ஓயிட் எல்லீசின் யாப்பிலக்கண விளக்கவுரை நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:- 200 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் கலெக்டராக பணியாற்றிய பிரான் சிசு ஒயிட் எல்லிசு என்ற ஆங்கிலேயரைப் பற்றி, தமிழ்நாட்டில் அறிந்திருப்ப–வர்கள் ஒரு சிலரே. 1809ம் ஆண்டில், ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழுமத்தின்ஆட்சித் தலைவராகப் பணி–யாற்றியவர் தான் எல்லி–சுப் பெருமகனார். தமிழில் மட்டுமல்லாது, தென்னிந்திய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். அதன் விளை–வாக தென்னிந்திய மொழிகளுக்குத் தாய் மொழியாகத் தமிழே விளங்குகிறது என்ற உண்மையை உல–குக்கு முதன்முதலாக அறி–வித்தவர். மிகக்குறுகிய ஆண்டுக–ளில் தமிழைக் கற்று தமிழ் இலக்கண இலக்கியங்களை ஆய்வு செய்து விளக்கவுரை–யையும் பதிவு செய்தவர். தமிழ் மொழியில் உள்ள இலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல் தொன்னூல் விளக்கம் போன்ற நூல்களை முழுவ–துமாகக் கற்று உள்வாங்கிக் கொண்டவர். மிக குறுகிய தன் வாழ்நாளில், ஏராளமான தமிழ் ஒலைச் சுவடிகளை சென்னைக் கோட்டையில் சேர்த்து வைத்து அங்கு அச்சுக்கூடம் ஒன்றையும் அங்கு நிறுவியவர். அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, தேம்பாவணி, திருக்காவலூர், கலம்பகம் போன்ற நூல்களுக்கு விளக்கவுரை எழுதியவர். திருவள்ளுவரின் ஓலைச் சுவடி–களை எடுத்து அதனை முதன் முதலில் அச்சு வடி–வில் கொண்டு வந்தவர் எல்லீசு ஆவார். அவ்வாறு பன்முகத்திறமை–களைக் கொண்டிருந்த எல்லிசு தனது 41வது வய–தில் ராமநாதபுரத்தில் மறைந்தார். தமிழ்ப் பகைவர்கள் அவருக்கு உண–வில் விஷம் வைத்து கொன்று விட்டதாக கூறப்ப–டு–கிறது. 10 ஆண்டு–களே பணி–யிலிருந்த எல்லிசு தமிழ் மகனாக வாழ்ந்தி–ருந்தார். அர–சாங்கக் கோப்புகளில் கூட, எல்லீசன் என்று தமிழிலேயே கையொப்பமிட்டார். திரா–விடம் என்ற சொல்லை எல்லிசு தன் பதிவுகளில் பயன்படுத்தவே இல்லை. பிராமணர்கள் வழியில் கால்டுவெல் திராவிடம், திராவிடர் என்ற சொற்களை அறிமுகம் செய்து, தமிழர் வரலாற்றில் குழப்பத்தைத் தோற்றுவித்து விட்டார். எல்லிசின் அரிய ஆய்வுகள், மறைக்கப்பட்டன, மறுக்கப்பட்டன. தமிழை, தமிழரை அடிமைப்படுத்த நினைத்த தமிழ்ப் பகைவர்கள், கால்டுவெல்லைத் தூக்கி நிறுத்தி விளம்பரம் செய்தனர். எல்லீசு காலத்துக்குப் பின்னர், ஜி.யூ. போப் பையர் எல்லிசின் பதி–வுகள் சிலவற்றையும் பல ஓலைச் சுவடிகளையும் தன்னுடன் இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று, லண்டன் அருங்காட்சியகத்தில் சேர்த்தார். அவை, இன்றும் அங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் எல்லிசு தம் கைப்பட எழுதிய குறிப்புகள், 153 பக்கங்களில் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன. கறுப்பு மையி–னால் பழைய ஆங்கில எழுத்து வடிவில் தமிழ் விளக்கவு–ரைகளோடு அக்குறிப்பு–கள் உள்ளன. அக்குறிப்புகள் இரண்டு பகுதிகளாக உள்ளன. இரண்டு பகுதிகளிலும் தமிழ்ச் செய்யுள் அமைப்பு முறை–களை எல்லீசு விளக்கி–யுள்ளார். நேர்அசை, நிரையசை, தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்றவாறு, அவர் செய்யுட்களை ஆய்வு செய்துள்ளார். யாப்பிலக்கணத்தை முற்றிலும் கற்றுத் தேர்ந்திருந்தார் என்பது அவருடைய விளக்க–வுரை–களால் தெளிவாகி–ன்றன. இன்று, தமிழைப் படித்த–வர்களுக்கும் கிட்டாத, செய்யுள் இலக்கணப் புலமை எல்லீசுக்கு இருந்ததை அவருடைய விளக்கவுரைகள் கூறுகின்றன. உச்சத்தில் வைத்துப் பாராட்டப்ப வேண்டியவர் எவ்வாறு மறக்கப்பட்டார். எனவே தமிழகத்தில் பிரான்சிசு ஒயிட் எல்லீசு சிலையை நிறுவி, தமிழக அரசு அவருக்கு ஆண்டு தோறும் விழா நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசி–னார்.


    Next Story
    ×