search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    அரியலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • அரியலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார்

    அரியலூர்,

    மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவை கண்டித்தும் உரிய விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஷேக்தாவூத் பங்கேற்று ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் காந்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க உறுப்பினர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

    Next Story
    ×