search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்
    X

    ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்

    • ஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மரணம் அடைந்தார்
    • அரசியல் கட்சியினர் அஞ்சலி

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கிராமத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தா கோவிந்தசாமி படையாச்சி–யாரின் மைத்துனர் ப.தங்க–வேலு (வயது 87).வழக்கறிஞரான இவர் கடந்த 1960-65 ஆம் ஆண் டுகளில் காட்டுபிரிங்கி–யம் ஊராட்சி மன்ற தலைவரா–க–வும், அரியலூர் யூனி–யன் சேர்மனாகவும் இருந்துள் ளார்.அதேபோல் 1980 முதல் 1984-ம் ஆண்டு வரை ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றி உள்ளார். தற் போது அரியலூர் ராஜாஜி நகரில் வசித்து வந்தார்.

    இதற்கிடையே உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை மரணம் அடைந் தார்.அவரது உடலுக்கு சகோதரர் வி.ராமகி–ருஷ் ணன், சகோதரி மகன்களும், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆதீன பரம்பரை தர்மக்கர்த்தாக்களுமான கோ.ராமச்சந்திரன், கோ.ராமதாஸ், கோ.–வெங்கடாஜலபதி மற்றும் அனைத்து அரசியல் கட்சி–யினர் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்டு, அரியலூரில் உள்ள மயானத்தில் உடல் அடக்கம் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளர்.


    Next Story
    ×