search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரியலூரில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 52 பேருக்கு பணி நியமன ஆணை
    X

    அரியலூரில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 52 பேருக்கு பணி நியமன ஆணை

    • அரியலூரில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 52 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கபட்டது
    • இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழில் நெறி வழிகாட்டல் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்(பொ) கலைச்செல்வன் கலந்து கொண்டு 52 பேருக்கு பணி நியமனத்துக்கான சான்றிதழை வழங்கி மேலும் பேசியது: வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது அரசின் நோக்கமாகும். அதன்படி மாவட்டத்தில் ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

    சி.என்.சிஆப்ரேட்டர், டெய்லரிங், சூப்பர்வைசர், மென்பொருள் பொறியாளர், மொபைல் அசம்பளர் போன்ற 910க்கும் மேற்பட்ட பணிக் காலியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான ஆள்களை தேர்வுசெய்தனர். முகாமில் 293 பேர் கலந்து கொண்டதில் 52 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே உங்களால் முடியும் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி என்றார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள் வினோத் குமார் , மணிமாறன், உதவியாளர் ராஜா, கணபதி மற்றும் அகல்யா ஆகியோர் செய்திருந்தனர்.


    Next Story
    ×