search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுச்சாவடி கிராமத்தில் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    புதுச்சாவடி கிராமத்தில் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • புதுச்சாவடி கிராமத்தில் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • விழாவில் வாஸ்து சாஸ்திர ஹோமம், மகா கணபதி ஹோமம், அஷ்டதரன் மகா ஹோமம், சம்கார பூஜைகள், மண்டல பூஜை முதற்காலை யாகம் உள்ளிட்டவை நடைபெற்றது

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுச்சாவடி கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ ஆகாச மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன் தினம் வாஸ்து சாஸ்திர ஹோமம், மகா கணபதி ஹோமம், அஷ்டதரன் மகா ஹோமம், சம்கார பூஜைகள், மண்டல பூஜை முதற்காலை யாகம் உள்ளிட்டவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகாதீப ஆராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டார். இந்து முன்னணி மாவட்ட நிர்வாகி பழனிச்சாமி, மாநில நிர்வாகி ராம பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×