என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மினி லாரி மோதி கூலித்தொழிலாளி பலி
- பொது மக்கள் சாலை மறியல்
- ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு
அரியலூர்,
அரியலூர் அருகேயுள்ள அமீனாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது65). கூலித்தொழிலாளியான இவர், காலை வீட்டின் அருகேயுள்ள அரியலூர் - செந்துறை சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு தனியார் சிமென்ட் ஆலைக்குச் சென்ற மினி லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியன் உயிரிழந்தார்.தகவலறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இறந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மினிலாரி ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிவேமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.இச்சம்பவத்தை அறிந்த அரியலூர் காவல் துறையினர் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்