search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மினி லாரி மோதி கூலித்தொழிலாளி பலி
    X

    மினி லாரி மோதி கூலித்தொழிலாளி பலி

    • பொது மக்கள் சாலை மறியல்
    • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு

    அரியலூர்,

    அரியலூர் அருகேயுள்ள அமீனாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது65). கூலித்தொழிலாளியான இவர், காலை வீட்டின் அருகேயுள்ள அரியலூர் - செந்துறை சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு தனியார் சிமென்ட் ஆலைக்குச் சென்ற மினி லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணியன் உயிரிழந்தார்.தகவலறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இறந்தவரின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மினிலாரி ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிவேமாக செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.இச்சம்பவத்தை அறிந்த அரியலூர் காவல் துறையினர் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×