என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
முதியோர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம்
- முதியோர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது
- முகாம் கிராம நலச் சங்க வளாகத்தில் நடைபெற்றது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், இருங்களாகுறிச்சி கிராமத்தில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் மூத்த குடிமக்களுக்கான சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கிராம நலச் சங்க வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான மகாலட்சுமி தலைமை வகித்து பேசினார்.
முகாமுக்கு அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலர் அழகேசன் முன்னிலை வகித்தார். வழக்குரைஞரும் , சட்ட ஆலோசகருமான பகுத்தறிவாளன் மற்றும் ஊராட்சித் தலைவர் ஆகியோர்கள் கலந்துகொண்டு பேசினர்.முதுநிலை நிர்வாக அலுவலர் வெள்ளச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக கிராம நல சங்க வளாக நிர்வாகி ராஜா வரவேற்றார்.
கோவிந்தபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவ, மாணவியர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாமை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மகலாட்சுமி தொடக்கி வைத்து, மாணவ மாணவியர்கள் படிக்கும் போது நல்ல பழக்க வழக்கங்களை கையாள வேண்டும்.
போதை பொருள்கள் மற்றும் போதை தரும் வஸ்த்துக்களை உபயோகப்படுத்தக்கூடாது .போதைப் பொருள்களை விநியோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமை செய்யும் என்றார்.பள்ளி தலைமையாசிரியர் அய்யம்பெருமாள் வரவேற்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்