search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது
    X

    மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது

    • மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது செய்யபட்டார்
    • போலீசார்,அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தில் அரசு பானங்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சிலால் பகுதியில் சந்தேகத்துக்குரிய இடங்களில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சுனாமி தெற்கு தெருவை சேர்ந்த பழனிவேல் மகன் அழகுவேல் (44) என்பவர் வீட்டில் சோதனை இட்டபோது அவரது வீட்டில் 19 மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×