என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ஆண்டிமடம் அருகே மது போதையில் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது
Byமாலை மலர்21 April 2023 6:14 AM GMT
- ஆண்டிமடம் அருகே மது போதையில் மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது செய்யபட்டார்
- இதுகுறித்து சத்யாவின் கணவர் ரங்கநாதன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை அருகே உள்ள காலனி தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35). இவரது எதிர்வீடடில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்ட மற்றொரு சமூகத்தை சேர்ந்த திருமணமான சத்யா (50) என்ற பெண்ணை மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.அந்தப் பெண் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது ராஜேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து சத்யாவின் கணவர் ரங்கநாதன் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி (ஆண்டிமடம் பொறுப்பு) ராஜேஷ் என்பவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சத்யா, ரங்கநாதனுக்கு கல்லூரி படிக்கும் வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X