என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ம.தி.மு.க. தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்பம் விநியோகம்
- அரியலூரில் மாவட்ட மதிமுக நிர்வாகி தேர்தலுக்கு விண்ணப்பம் விநியோகம் நடைபெற்றது
- எம்எல்ஏ சின்னப்பா விநியோகிகத்தார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் அவைத் தலைவர், மாவட்டச் செயலர், துணைச் செயலர், பொருளாளர், ஒன்றியச் செயலர், துணைச் செயலர் உள்பட அனைத்து கிளை பொறுப்பாளர்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று மதிமுக தலைமை அலுவலகம் அறிவித்தது. அதன்படி, இதற்கான விண்ணப்ப படிவம் வழங்கும் பணி அரியலூரிலுள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான கு.சின்னப்பா தலைமை வகித்து, ஜனநாயக முறையில் நடைபெறும் இந்த தேர்தலில், மாவட்ட செயலர் உள்பட அனைத்து பதவிக்கும் போட்டியிட கட்சியினர் அனைவருக்கும் தகுதியுண்டு. இனிவரும் காலங்களில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு நான் போட்டியிடப் போவதில்லை என்றார். தொடர்ந்து அக்கட்சியின் மாநில மாணவரணி அமைப்பாளர் சசிகுமார், போட்டியிடும் நிர்வாகிகளுக்கு வேட்புமனு படிவத்தை வழங்கினார். போட்டியிட விரும்புவர்கள் விண்ணப்பக் கட்டணமாக தலா ரூ.25 செலுத்தி படிவத்தைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலர் வாரணவாசி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்