search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை
    X

    2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை

    • 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    உடையார்பாளையம்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தேவமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இளையராஜா. இவர் வெளிநாட்டில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். பின்னர் சொந்த ஊர் திரும்பிய அவர் தற்போது கழுவந்தோண்டி கிராமத்தில் இ-சேவை மையம் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி அனிதா(வயது 30). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும், 2 மாதத்தில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் சமீப காலமாக அனிதாவுக்கு தற்கொலை எண்ணம் வருவதாக கூறி புலம்பி வந்துள்ளார். தொடர்பாக அனிதாவின் பெற்றோர்களுக்கு, இளையராஜா தகவல் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து தனியார் மருத்துவரிடம் அனிதா அழைத்து செல்லப்பட்டு உள்ளார். மனநல மருத்துவம் அவருக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் தனது இ-சேவை மையத்திற்கு இளையராஜா செல்லும்போது, பள்ளி விடுமுறை காலம் என்பதால் தனது மகனையும் தன்னோடு இ-சேவை மையத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்.

    மீண்டும் மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டி பார்த்து திறக்காததால், சந்தேகம் அடைந்த இளையராஜா, ஜன்னலை உடைத்து பார்த்துள்ளார்.அப்போது அவரது மனைவி அனிதா வீட்டிற்குள் தூக்கு போட்டு தொங்கியதாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த இளையராஜா அக்கம் பக்கத்தினரை அழைத்து, அவர்கள் உதவியுடன் பின் பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடலை மீட்டுள்ளனர்.

    அங்கிருந்து ஜெயங்கொண்டம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து இளையராஜா தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், பிரேதத்தை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.


    Next Story
    ×