என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
எண்ணும் எழுத்தும் திட்ட விழா
- ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி நடைபெற்றது
- மாணவர்கள் கற்று கொண்ட செயல்முறைகளை, தனித்தனியாக வெளிப்படுத்தினர்
அரியலூர்,
அரியலூர் அடுத்த அஸ்தினாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட்டத்தின், ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.தமிழகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கவும், எழுதும் திறன், வாசித்தல் திறனை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், 'எண்ணும் எழுத்தும்' திட்டம் கொண்டுவரப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு கற்பித்தல் திறனை மேம்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, அரியலூர் அடுத்த அஸ்தினாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மாணவர்கள் செயல்பாடு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதா தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், தங்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில், எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் கற்று கொண்ட செயல்முறைகளை, தனித்தனியாக வெளிப்படுத்தினர். இதில் மாணவர்கள் வாசிக்கும் திறன், பாடல் பாடி ஒப்புவித்தல் போன்ற திறன்களை வெளிப்படுத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலைமணிகலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்