search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஜெயங்கொண்டம் அருகே நீரில் மூழ்கி முதியவர் பலி
    X

    ஜெயங்கொண்டம் அருகே நீரில் மூழ்கி முதியவர் பலி

    • ஜெயங்கொண்டம் அருகே நீரில் மூழ்கி முதியவர் பலியானார்
    • சின்னவளையம் அரங்கநேரி படித்துறையில் கால் கழுவுவதற்காக சென்றவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடிபள்ளத்தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் மகன் பரகத்துல்லா (வயது47). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை, கால் வராமல் சிரமப்பட்டு வந்தார். இந்நிலையில் சின்னவளையம் அரங்கநேரி படித்துறையில் கால் கழுவுவதற்காக சென்றவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பரகத்துல்லாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உறவினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. முதியவர் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    Next Story
    ×