search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜல்லிக்கட்டு காளை முட்டி முதியவர் பலி
    X

    ஜல்லிக்கட்டு காளை முட்டி முதியவர் பலி

    • ஜல்லிக்கட்டு காளை முட்டி முதியவர் பலியானார்
    • புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே நல்லணம் காலனி தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் ரவிச்சந்திரன் (வயது 57). இவர் நடுவலூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க சென்றுள்ளார். அப்போது வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விட்ட காளை, போட்டியை கண்டு களித்த ரவிச்சந்திரனை முட்டியது. இதில் காயமடைந்த ரவிச்சந்திரன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து ரவிச்சந்திரன் மனைவி விசாலாட்சி உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×