search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்
    X

    அரியலூரில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்

    • அரியலூரில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது
    • மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் அத்துறை சார்ந்த விவரங்களை எடுத்துரைத்தனர்.

    அரியலூர்,

    அரியலூர் வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் பள்ளி செல்லா மாணவர்கள் குறித்து அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி பயற்சியை தொடக்கி வைத்து பயிற்சியின் நோக்கம் மற்றும் அதன் பணிகள் குறித்து விளக்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா பயிற்சி வகுப்பை பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்தும், 10, 11, 12-ம் வகுப்பில் பள்ளி செல்லாதவர்கள் மற்றும் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் குறித்து கள ஆய்வு செய்து அவர்கள் உடனடியாக தேர்வு எழுதுவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவைச் சேர்ந்த அலுவலர்கள் அத்துறை சார்ந்த விவரங்களை எடுத்துரைத்தனர்.

    Next Story
    ×