search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு
    X

    கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு

    • அரியலூர் காவல்துறை சார்பில் திறக்கப்பட்டது
    • மாவட்ட எஸ்.பி. பெரோஸ்கான் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்

    உடையார்பாளையம்,

    அரியலூர் நகர அண்ணா சிலை அருகே காவல்துறை உணவகத்தின் முன்பாக கோடை காலத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு உள்ளது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா தண்ணீர் பந்தலை அவர்கள் திறந்து வைத்தார். அதன் பின்னர் பொது மக்களுக்கு அவர், நீர்மோர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துணை கண்காணிப்பாளர்கள் சங்கர் கணேஷ், வெங்கடேசன் , அரியலூர் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் பத்மநாபன் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×