search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தா.பழூர் அருகே டாஸ்மாக் கடை அருகே மயங்கி கிடந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி சாவு
    X

    தா.பழூர் அருகே டாஸ்மாக் கடை அருகே மயங்கி கிடந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி சாவு

    • தா.பழூர் அருகே டாஸ்மாக் கடை அருகே மயங்கி கிடந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    • மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

    அரியலூர்:

    கடலூர் மாவட்டம் மேல கஞ்சம் கொள்ளை பகுதியை சேர்ந்தவர் அருள்பாண்டியன் (வயது 28), பெயிண்டர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலி அரசு டாஸ்மாக் மதுபான கடை அருேக மயங்கி கிடந்த அருள்பாண்டியனை மீட்ட அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அருள்பாண்டியன் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    Next Story
    ×