என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வார சந்தை சீரமைப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி
- வார சந்தை சீரமைப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
- சேரும் சகதியுமாக இருந்தது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட வார சந்தை நீண்ட நாட்களுக்கு பிறகு நகராட்சி மூலமாக ஏலம் தனிநபருக்கு விடப்பட்டுள்ளது. மேலும் சந்தை முழுவதும் சேரும் சகதியுமாக கிடந்த நிலையில் பொதுமக்கள் மழைக்காலங்களில் காய்கறி வாங்க வருபவர்கள் மிக சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இந்நிலையில் ஏலம் எடுத்த குத்தகைக்காரர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் சகதி மற்றும் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத இடங்களை சரி செய்து வியாபாரிகள் அமர்வதற்கான ஏற்பாடுகள் செய்து மழை காலங்களில் பொதுமக்கள் நடந்து வருவதற்கு சிரமம் இல்லாமல் காய்கறிகள் வாங்கி செல்வதற்கு நடைபாதை முழுவதும் மண் அடித்து சரி செய்து உள்ளனர்.
இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மிக ஆர்வமாக சந்தைக்கு வந்து காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். சந்தையை சீரமைத்ததால் 50க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் கடை போடுவதற்கு வாய்ப்பு உள்ளதால் வியாபாரிகள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் சந்தைக்கு வரும் பொது மக்களுக்கு பாதுகாப்பாக கேமராக்கள் பொருத்தப்படுவதாக தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்