search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசுப் பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம்
    X

    அரசுப் பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம்

    • மாவட்ட எஸ்.பி. தொடங்கி வைத்தார்
    • குருவாடி அரசு பள்ளியில் விழா

    அரியலூர்,

    அரியலூர் அடுத்த குருவாடி கிராமத்திலுள்ளள அரசு மேல்நிலை பள்ளியில், எண்ணங்களின் சங்கமம் ஸ்வீட் டிரஸ் பாய்ஸ் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா இயக்கி வைத்தார். தொடர்ந்து அவர், பள்ளியின் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி, மாணவர்கள் சமூகப் பணியில் ஈடுபட வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், இளவரசன், ஓய்வு பெற்ற நல்லாசிரியர் தியாகராஜன், ஊராட்சித் தலைவர் சுப்புலட்சுமி ரவி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் சாக்ரடீஸ், மனோகரன் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×