என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தகுதியற்ற நுகர்வோர் அறக்கட்டளை நிர்வாகிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்-அரியலூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
- தகுதியற்ற நுகர்வோர் அறக்கட்டளை நிர்வாகிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்-அரியலூர் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
- இருசக்கர வாகனம் காணாமல் போனதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் கொடுக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரைச் சேர்ந்தவர் எம்.ஜி.பாலசுப்ரமணியன் (வயது 52). தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவராக இருந்துவரும் இவர், கீழகாவட்டங்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் வீமன் என்பவரின் ஏஜென்ட் எனக்கூறி வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இருசக்கர வாகனம் காணாமல் போனதற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் பணம் கொடுக்கவில்லை என்று தெரிவித்து இருந்தார். ஆனால் இன்சூரன்ஸ் நிறு–வனத்தினர் கேட்ட ஆவ–ணங்களை அவர் சமர்ப்பிக்கவில்லை.
இதேபோல், திருமழ–பாடி கிராமத்தில் வசிக்கும் சீராளனின் ஏஜென்ட் என கூறி பாலசுப்ரமணி–யன் தாக்கல் செய்த வழக்கில், இறந்த–வருக்கு அவரது மருமகன் சீரா–ளன் இறந்தவரின் வாரிசுகளை விட்டுவிட்டு காப்பீட்டுத்தொகை தர–வில்லை என வேளாண்மை இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீதும், அரியலூர் வேளாண்மை இணை இயக்குநர் மீதும் வழக்கு தொடுத்திருந்தார். செந்துறை அடுத்த சன்னாசிநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் ஏஜென்ட் என்று கூறி நிலத்தை அளந்து தரவில்லை என தெரிவித்து செந்துறை வட்டாட்சியர் மற்றும் கலெக்டர் மீதும், ஆசவீரன்குடிக்காடு கிரா–மத்தில் வசிக்கும் கலியபெ–ருமாள் என்பவருக்கு ஏஜென்டாக தாக்கல் செய்த வழக்கில், எம்.ஜி.பாலசுப்ர–மணியன் அவரது மனை–வியின் ஏஜென்ட் என்று கூறி கீழப்ப–ழுவூர் சார்பதிவாளர், அரியலூர் மாவட்ட பதிவாளர் மற்றும் திருச்சி முத்திரை கட்டண துணை கலெக்டர் ஆகியோர் மீதும் வழக்கு தொடுத்து இருந்தார்.
இந்த 5 வழக்குகளையும் விசாரித்து வந்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறை–தீர் ஆணைய நீதிபதி வீ.ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் என்.பாலு, வீ.லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு, பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்திருந்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ததது. மேலும், தகுதியில்லாமல் வழக்கு தொடுத்தற்காக பாலசுப்பிரமணியனுக்கு ஒவ்வொரு வழக்குகளுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், நுகர்வோர் குறைதீர் ஆணையங்களிலும், அரசு அலுவலகங்களிலும் நுகர்வோரின் பிரதிநிதி என கூறி ஆஜராக எம்.ஜி.பாலசுப்பிரமணியனுக்கு தகுதி இல்லை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்