search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விசாலாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
    X

    விசாலாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

    • விசாலாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • விசாலாட்சி அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்தார்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி சுவாமி, அம்பாள் மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் விஸ்வநாதர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விசாலாட்சி அம்மன் அகிலாண்டேஸ்வரி கோலத்தில் அலங்காரம் செய்யப்பட்டு, வளையல், மாலை அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் விசாலாட்சி அம்மன் ராஜ வீதிகளில் ஆடிப்பூரத்து அம்மனாக எழுந்தருளி வீதி உலா வந்தார். விடையாற்றி உற்சவத்துக்கு பிறகு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×