என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்
- அரியலூர் மாவட்டத்தில் கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் தொடங்கியது
- 200 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் தொடங்கியது.பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 200 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நாள்தோறும் விளையாட்டு பயிற்றுநர்களைக் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் கூடைப்பந்து, கால்பந்து,கையுந்துப் பந்து மற்றும், ஹாக்கி, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.15 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. பயிற்சி நிறைவில் மாணவ, மாணவிகள் பயிற்சி முகாமில் பங்கேற்றதற்கான சான்றுகள் வழங்கப்படும் என்று மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் லெனின் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்