search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கல்வி கடன் திருப்ப செலுத்த இறந்த மாணவனுக்கு சம்மன்
    X

    கல்வி கடன் திருப்ப செலுத்த இறந்த மாணவனுக்கு சம்மன்

    • கல்வி கடன் வாங்கியவர் இறந்த நிலையில் கோர்ட்டில் வழக்கு
    • செய்வதறியாது மாணவர் குடும்பம் தவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் அருகே திருமானூர்ப குதியை ேசர்ந்தவர் பன்னீர்செல்வம் விவசாய குடும்பத்தை சார்ந்தவர், அவரது மகன் அரவிந்த், இவர் ப்ளஸ்2 தேர்ச்சி பெற்ற பின்பு கரூரிலுள்ள தனியார்கல்லூரியில் இன்ஞ்னியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார், தொடர்ந்து படிக்கவைக்க முடியாமல் சிரம ப்பட்டுவந்த பன்னீ ர்செல்வம் திருமழப்பாடியில் உள்ள வங்கியில் 2013ஆம் ஆண்டு 2லட்சம் கல்வி கடன் பெற்றுள்ளார், வேலை கிடைக்காமல் தந்தைக்கு உதவியாக விவசாயம் பார்த்துவந்துள்ளார்.2022ம் ஆண்டு திருவையாறில் நடந்த சாலை விபத்தில் அரவிந்த் இறந்துவிட்டார், வங்கி நிர்வாகம் கல்விகடன்களை வசூலிக்க திவிரம் காட்டியது, ஆனால் பன்னீர்செல்வம் வங்கிக்கு சென்று கல்வி கடன் செலுத்த வசதியுமில்லை, எனது மகனும் இறந்தும் விட்டான், கல்வி கடனை ரத்து செய்யவேண்டும் என கோரி மகனின் இறப்பு சான்றிதழ் இணைத்து எழுத்து மூலமாக மனு கொடுத்துள்ளார். இந்த மனுவை முதலமை ச்சருக்கும், அரசுதுறை அதிகாரி களுக்கும், வங்கி உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பி யுள்ளார்.இந்நிலையில் அரியலூரில் உள்ள சப்கோர்ட்டில் திருமழ ப்பாடியில் உள்ள வங்கி நிர்வாகம் அரவிந்த் அவரது தந்தை பன்னீர்செல்வம் மீது கல்விகடன் வசூல் செய்ய வழக்கு தொடர் ந்துள்ளனர். கல்வி கடன் வாங்கியது ரூ.2லட்சம், ஆனால் அசல் வட்டி எனக்கணக்கிட்டு ரூ.5லட்சம் கேட்டு சாலை விபத்தில் இறந்த அரவிந்தனுக்கு கோர் ட்டிலிருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இந்த வழக்கின் விசாரனை ஜீன் 7-ந் தேதி போடப்பட்டுள்ளது. கல்வி கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுக்கப்ப ட்டாலும், கல்வி கடன் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வைத்தாலும், இறந்தவர் மீது கல்வி கடன் வசூல் செய்ய நேட்டிஸ் அனுப்பியது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×