search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா
    X

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா

    • மாநில பொதுச்செயலாளர் கலந்து கொண்டு பேசினார்
    • ஓய்வு பெற்ற பொறுப்பாளர்களுக்கு பாராட்டு நடைபெற்றது

    அரியலூர்,

    அரியலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தென்னிந்தியாவின் மூத்த ஆசிரியர்கள் சங்கம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரியலூர் வட்டாரம் சார்பில் இயக்க பவள விழா, பொதுச்செயலாளா; பாராட்டு விழா, ஓய்வுபெற்ற பொறுப்பாளர்கள் பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது, வட்டாரதலைவர் அருள்ஜோதி தலைமையில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவபாக்கியம், மகளிர் அமைப்பாளர்அம்சவள்ளி முன்னிலையில் மாவட்ட துணைதலைவர், வட்டாரசெயலாளர் சண்முகம் ஆகியோர் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாநிலதுணைதலைவர், மாவட்ட செயலாளராகிய எழில், மாவட்டபொருளாளர் தங்கசிவமூர்த்தி, மாநிலசெயற்குழு உறுப்பினர் வேலுமணி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். ஓய்வு பெற்ற பொறுப்பாளர்களை பாராட்டினார்கள், இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன், மாநிலதுணை பொதுச்செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார்கள், விழா முடிவில் வட்டாரப்பொருளாளர் நன்றி கூறினார்.

    Next Story
    ×