search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க முப்பெரும் விழா
    X

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க முப்பெரும் விழா

    • பணி பாதுகாப்பு வழங்க கோரிக்கை
    • கோரிக்கை நிறைவேறாவிட்டால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்ட தேர்தல் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு என முப்பெரும் விழா ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. புதிய நிர்வாகிகளாக மாவட்ட தலைவர் ராஜாவும், மாவட்ட செயலாளர் பாக்கியராஜும், மாவட்ட பொருளாளர் துரை.நந்தகுமார், மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் புதிதாக பதவியேற்றனர். கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், கிராம நிர்வாக ஊழியர்களுக்கு பணி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், ஐந்தாண்டுகள் பணி முடித்து பயிற்சி முடித்தும் தகுதிக்கான பருவம் முடிக்காத கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் உள்ளனர். இதனால் உரிய பணப்பயன்கள் பெற முடியாமல் உள்ளனர். இரண்டு வார காலத்திற்குள் அனைத்து பணப்பயன்களையும் பெற மாவட்ட வட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் அனைத்து வட்ட தலைநகரங்களிலும் கவன ஈர்ப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில பிரச்சார செயலாளர் பொய்யாமொழி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×