என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
தா.பழூர் அருகே மோட்டார் சைக்கிளில்் சென்ற ஊராட்சி செயலாளர் மயங்கி விழுந்து சாவு
- தா.பழூர் அருகே மோட்டார் சைக்கிளில்் சென்ற ஊராட்சி செயலாளர் மயங்கி விழுந்து பலியானார்
- இச்சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம் மகன் முருகேசன் (வயது50). இவர் சாத்தம்பாடி ஊராட்சியில் பஞ்சாயத்து செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சாத்தம்பாடி ஊராட்சியில் பணி முடித்துவிட்டு வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் தனது மனைவி வீடான சிலால் கிராமத்திற்கு செல்வதற்காக தா.பழூர்- ஜெயங்கொண்டம் சாலை யில் சென்று கொண்டி ருந்தார். அப்போது கோடங்குடி அருகே வந்தபோது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் நிலைதடுமாறி கீழே சரிந்து விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர்கள் அவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்குஅவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்