search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ரெயிலில் அடிபட்டு பெண் பலி
    X

    ரெயிலில் அடிபட்டு பெண் பலி

    • ரெயிலில் அடிபட்டு பெண் பலியானார்
    • இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலுப்பையூர் ரெயில்வே கேட் நல்ல அறிக்கை சாலையில் உள்ள ரெயில்வே கேட் தெற்கே சுமார் 100 மீட்டர் தொலைவில் 2 ரெயில் செல்லக்கூடிய தண்டவாளங்களுக்கு இடையே உள்ள காலி இடத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் ரெயிலில் அடிபட்டு மூளை சிதறி கை, கால்கள் நொறுங்கிய நிலையில் புதர்கள் நிறைந்த பகுதியில் கிடந்தது. இதையடுத்து, ரெயில்வே போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×