search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மொபட்- சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலி
    X

    மொபட்- சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலி

    • ஜெயங்கொண்டம் மருதூர் கிராமத்தில் விபத்து நடந்தது
    • காயமடைந்த மகளுக்கு தொடர் சிகிச்சை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருதூர் கிராமம் திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கவிதா. இவர் தனது மகள் பவித்ராவை மொபட்டின் பின்னால் உட்கார வைத்துக்கொண்டு கண்டியங்கொல்லை கிராமத்திலுள்ள எள்ளு வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று கொண்டிருந்தார்.தண்ணீர் பந்தல் என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, மருதூர் மேலத்தெருவை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் ஓட்டி சென்ற சைக்கிள் மீது மொபட் மோதி விபத்திற்குள்ளானது. இதில் காயமடைந்த 3 பேரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் கவிதா செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகள் பவித்ரா சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார். வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×