search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் மர்மச்சாவு
    X

    கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் மர்மச்சாவு

    • செல்போனில் பேசிக்கொண்டே சென்ற சத்தியா நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
    • கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாக உறவினர்கள் புகார்

    செந்துறை,

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள ஆலவாய் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி சத்தியா (வயது 28). இந்த தம்பதிக்கு வேதா (9) என்ற மகளும், சாரதி (3) என்ற மகனும் உள்ளனர். கொளஞ்சி கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சத்தியா தனது குழந்தைகளுடன் ஆலவாய் கிராமத்தில் வசித்து வந்தார்.இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சத்தியாவுக்கு தொடர்பு ஏற்பட்டு, நாளடைவில் அதுவே கள்ளக்காதலாக மாறியது. கணவர் கோவையில் வேலை பார்த்து வரும் நிலையில் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனை அவரது உறவினர்கள் பலமுறை கண்டித்தும் சத்தியா திருந்தவில்லை.

    இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சத்தியா தனது குழந்தைகளை தவிக்கவிட்டு திருப்பூருக்கு சென்று அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து செந்துறை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சத்தியாவின் தாய்மாமா பெரியசாமியின் மனைவி சொந்த ஊருக்கு அழைத்து வந்தார். தன்னுடன் தங்க வைத்து தகுந்த அறிவுரைகள் கூறி அதே பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலையும் வாங்கி கொடுத்தார்.இதனை அறிந்த கள்ளக்காதலன் அவ்வப்போது சத்தியாவை தனிமையில் சந்தித்து வந்தார். அப்போது அவருக்கும், கள்ளக்காதலனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பிள்ளைகள் தாயுடன் வசித்தால் அவர்களுடைய வாழ்க்கை பாழாகி விடும் என்று கருதி, சத்தியாவின் கணவர் கொளஞ்சி தனது மகனை மட்டும் தன்னுடன் அழைத்து சென்றார். மகள் மட்டும் ஆலவாய் கிராமத்தில் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

    இந்த நிலையில் சத்தியாவுக்கு நேற்று இரவு சுமார் 8 மணியளவில் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய கள்ளக்காதலன் அவரை தனியாக வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து செல்போனில் பேசிக்கொண்டே சென்ற சத்தியா நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.இன்று காலை செந்துறையில் உள்ள தனியாருக்கு சொந்தமான தேக்கு மரத்தோப்பில் ஒரு மரத்தில் சேலையில் சத்தியா தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் செந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அப்போது அங்கு திரண்ட உறவினர்கள் சத்தியாவின் கள்ளக்காதலன் தான் இரவில் தனியாக வரச்சொல்லி அவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளார் என்று பரபரப்பு புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சத்தியா

    Next Story
    ×